Thursday, September 20, 2007

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

குயில் கூவும் வயல் வரப்புகள்,தெள்ளிய நீரோடை, ஆரவாரமில்லாத கிராமத்து மக்கள் இவை எல்லாம் எளிமையான தான்.
ஆனால் அந்த எளிமை தான் எத்தனை அழகு

ஆர்ப்பாட்டமெல்லாம் அடங்கிய பிறகு எளிமையைத் தான் மனம் நாடும்
ஆர்ப்பாட்டமான அழகெல்லாம் ஆயுள் வரை மனதில் நிலைப்பதில்லை.

இந்த பாடலும் எளிமையான அழகை தான் நம் கண் முன்னே கொண்டு வரும்.

தேவா என்ற இசையமைப்பாளரை இணைய வாசகர்கள் மறந்து வருகிறார்கள்
90 களில் அவர் பல அருமையான பாடல்களுக்கு மெட்டமைத்திருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஜானகியின் குரல் 100% மெட்டோடு பொருந்தி பாடலின் உயிராகின்றது

திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றும் வரிகள்


“துள்ளி விழும் அருவியைப் போல்
உன்னுடைய பார்வை என் மேல் பட்டவுடன் பறந்து வானில் சிறகடிப்பதென்ன”


கண்டிப்பாக தனிமையில் கேட்க வேண்டிய பாடல்

தலைவனை நினைத்து ஏங்கும் பெண் ஜானகி அவர்களின் குரலில் இதோ



தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

மாலையிட்டு பூ முடித்து மஞ்சளிட்டு நான் குளித்து
மன்னவனைத் தேடித் தேடி நான் மயங்குகிறேன்
தேரில் வரும் போதும் சுகம் தென்றல் தரும் நாதம் சுகம்
தெய்வத்திற்கு நன்றி சொல்லி நான் வணங்குகிறேன்
மஞ்சளோடு குங்குமமும் மன்னவனின் பூஜைக்கென்றுநான் படைத்தேன்
உயிரிலே உறவிலே கலந்து வாழ்கிறேன்
நான் நினைத்து பார்க்கிறேன் உன் நிழலில் சாய்கிறேன்

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

துள்ளி விழும் அருவியைப் போல்
உன்னுடைய பார்வை என் மேல் பட்டவுடன் பறந்து வானில் சிறகடிப்பதென்ன
என்னருகில் நீ இருந்து உன்னிரண்டு கண் மலர்ந்தால்
நெல்லின் மணி போல எந்தன் நிழல் தெரிவதென்ன
பெண்ணிலவு உன்னை எண்ணி வெண்ணிலவைப் போல இங்கு தேய்வதென்ன
தலைவனே தழுவ வா தனிமை வாட்டுது வா பருவம் ஏங்குது
முள்ளில் படுத்துத் தூங்குது

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

படம்: என் ஆசை மச்சான்
இசை: தேவா
வரிகள்: வாலி
வெளியான வருடம்: 1996

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்


Thalaivanai-EnAsai...




free web hit counter image


Wednesday, September 5, 2007

மாமர கிளியே உன்ன இன்னும் நா மறக்கலயே

மாமரம், கிளி, மாசு இல்லா மனம் கொண்ட மக்கள் இவை யாவும் கிராமத்திற்கே உரித்தானது
ஜானகியின் துள்ளல் நிறைந்த குரலில் ஒரு கிராமத்து பெண்ணின் காதல் வெளிப்படும் அழகை பாருங்கள்.


திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் இந்த பாடலின் இரண்டு வரிகள்

" அட டட மம்முதங்கணையே
வந்து வந்து மயக்குது எனையே "

மயக்கும் குரலில் இதோ பாடல்


அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே

அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே ஏ......ஏ

உன்ன நினைச்சே மஞ்சளரச்சேன்
மாசக் கணக்கா பூசிக் குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
உன்ன நினைச்சே மஞ்சளரச்சேன்
மாசக் கணக்கா பூசிக் குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
அட டட மாதுளங்கனியே இதை இன்னும் நீ நினைக்கலயே
கிட்ட வாயேன் கொத்தி போயேன்
உன்ன நா தடுக்கலயே மறுக்கலயே

அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே

உப்பக் கலந்தா கஞ்சி இனிக்கும்
உன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும்
அட பரிசந்தா போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு
உப்பக் கலந்தா கஞ்சி இனிக்கும்
உன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும்
அட பரிசந்தா போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு
அட டட தாமரை கொடியே இது
உன் தோள் தொடரலியே
செல்லக் கண்ணு சின்னப் பொண்ணு இத
நீ நினைக்கலயே அணைக்கலயே

அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே..

தந்தே நத்த தந்தே நா நா
தந்தீ நா தீநந்தாநா
நந்தா நா
தந்தீந தீநந்திந தாநா

மீன புடிக்க தூண்டிருக்கு
நீரைப் புடிக்க தொண்டியிருக்கு
அட உன்னத் தான் நா புடிக்க
கண் வலையப் போட்டேன்
அட டட மம்முதங்கணையே
வந்து வந்து மயக்குது எனையே
இந்த ஏக்கம் ஏது தூக்கம்
பாய போட்டு படுக்கலயே புடிக்கலயே


அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே ஏ...ஏ


படம்
: சிட்டுக் குருவி
இசை: இசைஞானி
பாடல்: வாலி
வெளியான ஆண்டு: 1978

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்

Chittukuruvi-ADADA...





free web hit counter image


Friday, August 17, 2007

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

அழகான மனிதர்களைக் கண்டாலோ, இயற்கையின் அதி உன்னத படைப்புகளைக் கண்டாலோ
நம் மனதில் தோன்றும் வரிகள் 'அழகு ஆயிரம் உலகம் முழுவதும்'

அழகு என்றால் என்ன என்று ஹாய் மதனிடம் ஒரு முறை கேட்கப்பட்டது
அதற்கு அவர் எதெல்லாம் ஒரு ஒழுங்கோடு வடிவமைக்கப் பட்டிருக்கிறதோ
அவை எல்லாம் நம் கண்களுக்கு அழகாகத் தோன்றுகின்றன என்றார்
இது ஓரளவு உண்மையான கூற்று தான்.

அழகு என்பது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப் படக் கூடியது.


கொட்டிக் கிடக்கின்றன ஆயிரம் அழகுகள் உலகங்கெங்கும் அவை எல்லாம்
ஒட்டிக் கொண்டிருக்கின்றது ஜானகியின் குரலோடு பாடலெங்கும்





பபப பாபப பபப பாபப
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமாமிய்யா மாமாமிய்யா
இறைவனின் திருக்கரம் எழுதிய ஓவியம்
மாமாமிய்யா மாமாமிய்யா மாமாமிய்யாமா
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்


பா....பபபபப்பா....பபபபப்பா
பபபாப்பா.......பபபாப்பா.....

ஏ...மனம் போல நாளும் மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்
ஏ...மனம் போல நாளும் மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்
சோலை எங்கும் காற்று
காற்றில் எங்கும் வாசம்
இளமையின் சிலிர்ப்புகள்
புதுமையின் அழைப்புகள் எங்கும்
மாமாமிய்யா மாமாமிய்யா

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமாமிய்யா மாமாமிய்யா
இறைவனின் திருக்கரம் எழுதிய ஓவியம்
மாமாமிய்யா மாமாமிய்யா மாமாமிய்யாமா

ஆ....மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்
ஏ......மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்
மாலை இன்ப மாலை
வேளை நல்ல வேளை
இனியது கனவுகள்
மயங்கிய நினைவுகள் எங்கும்
மாமாமிய்யா மாமாமிய்யா

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமாமிய்யா மாமாமிய்யா
இறைவனின் திருக்கரம் எழுதிய ஓவியம்
மாமாமிய்யா மாமாமிய்யா மாமாமிய்யாமா

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
லலலலாலலா..லலலலாலலா


படம்
: உல்லாசப் பறவைகள்
இசை: இசைஞானி
பாடல்: பஞ்சு அருணாசலம்
வெளியான ஆண்டு: 1980

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்

Azhagu Aayiram Ull...





free web hit counter image


Wednesday, July 25, 2007

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்

தாய்மை உணர்ச்சி மேலிட ஜானகி அவர்கள் லக்ஷிமிகாந்த் பியாரிலால் இசையில்
"உயிரே உனக்காக" படத்தில் பாடிய பாடலைத் தான் இந்த பதிவில் கேட்கப் போகிறீர்கள்

வானில் உள்ள விண்மீன் எல்லாம் கண்ணுங்குகிறதாம் இந்தக் குரலைக் கேட்டு

ஒவ்வொரு அட்சரத்திற்கும் பாவம் கொடுக்கக் கூடியவர் SJ. இந்தப் பாடலிலும்
ஒரு இடத்தில் 'அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்' என்று வரும். சாய்ந்திடுங்கள் என்று பாடும் போது
குரலும் அப்படியே சாய்வது போல் இருக்கும்.

இந்தப் பாடலை வெகுவாக ரசிக்க வேண்டும் என்றால் இரவில் உறங்குவதற்கு முன் கேளுங்கள்

உங்கள் தாயோ அல்லது உங்கள் இஷ்ட தெய்வமோ (பெண் தெய்வம்) இந்தப் பாடலைப் பாடுவது போல
கற்பனை செய்துக் கொண்டு பாட்டைக் கேளுங்கள். சொர்க்கம் நிச்சயம்


தேன் குரலில் தேனூறும் ராகம் திகட்டாமல் இருப்பது என்ன அதிசயமோ



ஆரீராரோ ஆரீராரீரோ
ஆரீராரோ ஆரீராரீரோ

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்....
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே........ஏ..ஏ...ஏ...

கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு

ஆடாத தீபம் தான் என் இல்லம்...ம்..ம்..ம்
பூங்காற்றுக்கும் தாங்காது என் உள்ளம்...ம்..ம்..ம்
உன் அன்பாலே பொங்காதோ ஆனந்த வெள்ளம்
கனவுகளே கனவுகளே இரவெனும் தீபம் எரிகின்ற நேரம்
உறவைத் தேடி வாருங்கள் கண்களில்....ல்...ல்..ல்
தென்றல் வீசும் கண்ணுறங்கு
உன்னை நீயே மறந்துறங்கு

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
ராரீரோ ஆரீராரீரோ
கண்ணின் மணியே நீயும் உறங்கு


ஆகாயம் மண் மீது வீழாது...
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது....
இனி என் போன்ற அன்னைக்கு ஏகாந்தம் ஏது
உறவுகளால் ஒரு உலகம்
இது ஒரு தோட்டம் கிளிகளின் கூட்டம்
ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம் கேட்கலாம்
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
ஆரீராரோ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் லால லால லா



படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த் பியாரிலால்
வெளியான வருடம்: 1985
வரிகள்: வைரமுத்து


பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்

UyiraeUnakkaaga-Th...




free web hit counter image

Friday, July 20, 2007

நிலவும் மலரும் -- SPB & S.Janaki இணைந்து பாடும் இசை நிகழ்ச்சி




சென்னையில் வருகிற 29 ஆம் தேதி எஸ்.பி.பி யும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடி கலக்கப் போகிறார்கள்
நீண்ட காலமாக இது போன்ற இசை விழாவிற்கு காத்திருந்த பலரில் நானும் ஒருவன்.
என் ஆதர்ஷ பாடகர்கள் இரண்டு பேரும் ஒரே மேடையில் பாடப் போகிறார்கள்

விவரம்

இடம்: நேரு உள் விளையாட்டு அரங்கம்
தேதி : 29 ஜூலை
நேரம் : மாலை 6 மணி
நுழைவு சீட்டு கிடைக்குமிடங்கள் : எல்லா நாயுடு ஹால் கடைகளிலும்

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9884152200

Wednesday, July 11, 2007

மானாட கொடி பூவாடும் ஒரு சோலை

எண்பதுகளில் வெளியான பெரும்பான்மையான திரைப்படங்களில் இயற்கையை ரசித்து கதாநாயகி பாடுவது போல் ஒரு பாடல்
கண்டிப்பாக இருக்கும். ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர இது போன்ற எல்லா பாடல்களையும் அம்மாவே பாடி இருப்பார்.
அந்த வரிசையில் அமைந்த பாடல்கள் எண்ணற்றவை. இந்த பதிவில் நடிகை ரம்யாகிருஷ்ணன் அறிமுகமான முதல் வசந்தம் என்ற
படத்தில் ஜானகி அவர்கள் பாடலை கேட்க போகிறீர்கள்.

இயற்கையை வியக்கும் இந்த பாடலில் "மேகத்தின் நாட்டியம் தந்தனன்னா தானனன்னா"
என்ற இடத்தில் வரிகள் அம்மாவின் குரலில் நாட்டியமாடும்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்




மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை
தோட்டத்து பூக்கள் எல்லாம் தேடுது என்னை
மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை


காற்சலங்கை ஓசையிட்டால் காட்டில் ஒரு பாட்டு வரும்
கைவளை தாளங்கள்
தந்தனன்னா தானனன்னா.. தந்தனன்னா தானனன்னா
ஓ....தேனோடும் வண்ணமலை நீரோடும் வெள்ளி அலை
ஜாடை மின்ன மின்ன ஆடை பின்ன பின்ன ஓ....

மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை

வானமென்னும் மேடையிலே வான வில்லின் ஓவியங்கள்
மேகத்தின் நாட்டியம்
தந்தனன்னா தானனன்னா.. தந்தனன்னா தானனன்னா
ஓ..ஊர்கோலம் வண்ணக்கிளி ஆலோலம் சொல்லும் மொழி
அன்னம் துள்ளத் துள்ள வண்ணம் என்ன சொல்லவோ

மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை
தோட்டத்து பூக்கள் எல்லாம் தேடுது என்னை
மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை



படம்: முதல் வசந்தம்
இசை: இசைஞானி
வெளியான வருடம்: 1986
ராகம்: சுத்த சாவேரி


பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்



Maanaa Kodi.mp3



free web hit counter image

Tuesday, July 3, 2007

நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்

இளையராஜா-மலையாள இயக்குனர்கள் இந்த கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும்
இதமான மெலடிகளாக அமையும். பரதன் இயக்கிய ஆவாரம்பூ படத்தில் எல்லா பாடல்களுமே அருமை

சோகத்தில் கொஞ்சம் சுகம் உண்டு

சோகமே இல்லையென்றாலும் கூட இந்த பாடலின் சுகம் உங்களை தாலாட்ட்ம்

காதலன் பிரிவால் வாடும் காதலியின் சோகம் அம்மாவின் குரலில்

தனிமையில் இந்த பாடலை கேட்டு பாருங்கள்.




நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்
நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்

நினைவோ வெறும் கனவோ இது எதுவோ
காதல் வரும் யார்க்கும் இந்த பாதை பொதுவோ

நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்

பல கோலம் போடும் வானம் மாறும் தடுமாறும்
புது ராகம் பாடும் காற்றோ சோகம் பாடும்
பனி தூங்கும் பூவின் தோற்றம் ஏனோ அதில் மாற்றம்
பகல் கூட இரவாய் தோன்றும் பாதை மாறும்
காதல் என்பது காலம் எங்கிலும் காத்து நின்றிடவோ
ஆசை என்பது ஆடிக் காற்றினில் ஓடி சென்றிடவோ
காதல் என்பது காலம் எங்கிலும் காத்து நின்றிடவோ
ஆசை என்பது ஆடிக் காற்றினில் ஓடி சென்றிடவோ
உறவே வெறும் கனவே வரும் நினைவே பழங்கதையே
கனவே என தெரிந்தும் மனம் நினைக்கும் அதையே

நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்

இளங்காதல் ஆசை நெஞ்சில் ஏக்கம் அது தாக்கும்
இரவென்ன பகலும் என்ன தூக்கம் போகும்
பிரிவேதும் அறியா நெஞ்சில் உருவானது பாரம்
உறவென்னும் உணர்வால் இங்கே உயிரே பாரம்
மோகம் என்பது வேகம் உள்ளது வேலி போட்டிடவோ
வேலி போட்டோரு காதல் தீயினை பாதுகாத்திடவோ
மோகம் என்பது வேகம் உள்ளது வேலி போட்டிடவோ
வேலி போட்டோரு காதல் தீயினை பாதுகாத்திடவோ
விதியால் ஒரு சதியால் இரு வழியாய் திசை பிரிந்தோம்
ஒரு நாள் அது திருநாள் ஒரு உணர்வால் இணைவோம்


நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்
நினைவோ வெறும் கனவோ இது எதுவோ
காதல் வரும் யார்க்கும் இந்த பாதை பொதுவோ

நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்


படம் : ஆவாரம்பூ
இசை: இளையராஜா
இயக்கம்: பரதன்
பாடியவர்: எஸ்.ஜானகி




Nathiyodum Karaioy...




free web hit counter image