Sunday, January 3, 2010

தூதுவளை இலை அரைச்சு..

தேவா என்ற இசையமைப்பாளரிடம் இருந்து மிக அழகான முத்துக்கள் போன்ற பாடல்கள் நிறைய வந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இன்று நாம் கேட்கப் போகும் பாடல். 'தாய் மனசு' என்ற படத்தில் எஸ்.ஜானகியும், மனோவும் பாடியது. கிராமிய மணம் கமழும் இந்தப் பாடல் மிக அழகாக மெட்டமைக்கப்பட்டு பாடப்பட்டுள்ளது.

நாட்டுப்புற மெட்டிலே பாடல்கள் இருந்தாலும், அவை கிராமியப் பாடல்கள்தான் என்று மக்களுக்கு உடனே புரிவது பாடுபவர்களின் உச்சரிப்பால்தான். அப்படிப் பார்க்கையிலே, இளையராஜாவுடைய பெரும்பாலான கிராமிய மணம் கமழும் பாடல்களை எஸ்.ஜானகி அவர்களே பாடியுள்ளார். அதன் காரணம் பாடல் வரிகளை அப்படியே உள்வாங்கிக்கொண்டு ஒரு கிராமத்துப் பெண் எப்படி உச்சரிப்பாளோ அப்படியே வெளிக்கொணரக் கூடியவர் எஸ்.ஜானகி என்பதனால்தான்.




இந்தப் பாடலிலும் 'இந்திரன் சந்திரனும்' என்று வருகிற இடத்தில் 'இந்திரஞ்சந்திரனும்' என்று பாடி இருப்பார். இது அச்சு அசலாக கிராமத்தில் உச்சரிக்கக் கூடிய முறை. அடுத்தது 'நான் கூட மனசுக்குள்ளே ஆச வளத்திக்கிட்டேன்' என்று வரும். அதில் 'வளத்திக்கிட்டேன்' என்பதும் நம்ம ஊர் பக்கம் பேசப்படுவதுதான்.

ஒரு பந்தைத் தூக்கி எறிந்து பிடிக்கக்கூடிய லாவகம் எஸ்.ஜானகியுடைய பாடும் விதத்தில் தெரிகிறது. 'தூதுவளை இலை அரைச்சு... தொண்டையில தான் நனைச்சு' என்று வார்த்தைகளை வீசி எறிகிறார். வேறு எந்த ஒரு பாடகருக்கும் இந்த லாவகம் வராது என்றே சொல்வேன்.


இந்தப் பாடலிலே மந்திரம் போல என்னைத் திரும்பத் திரும்ப கேட்க வைக்கக்கூடிய வரி,

"சுத்துற கண்ணுல சிக்குனு என்னை சிறையிடலாமோ" .

எஸ்.ஜானகியுடைய குரலின் இனிமை, இந்த இடத்தில் மிக அதிகமாகத் தென்படுவதாலோ இல்லை ஒரு சுத்து சுத்தி 'சிறையிடலாமோ' என்று மேலே ஏறக்கூடிய விதமா எது இந்த வரிகளுக்கு அழகு என்று தெரியவில்லை.

"சத்தமிட்டா உன் நிலைமை என்னாகும்"

இரண்டாவது சரணம் முடியும் இந்த இடத்தில் பாடகியுடைய அக்மார்க் சிரிப்பு, பாடலைக் கேட்பவர்கள் யாருடைய உதட்டிலும் ஒரு புன்னகையை பூக்கச் செய்து விடும்.


தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா

தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரஞ் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும் மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடனும்
நான் காத்தாகி ஊத்தாகி மாமனைத் தழுவி கட்டிக்கணும்

தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
நானும் கூட பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா

நாள் தோரும் காத்திருந்தேன்
நானே தவமிருந்தேன்
உனக்காகத்தான் கண்ணே உனக்காகத் தான்
நான் கூட மனசுக்குள்ளே ஆச வளத்திக்கிட்டேன்
உன்னப் பாத்துத்தான் மாமா உன்னப் பாத்துத்தான்
அட முத்துன கிறுக்கு மொத்தமும் தெளிய முறையிடலாமோ
சுத்துற கண்ணுல சிக்குனு என்ன சிறையிடலாமோ
எத்தன நாள் இப்படி நான் ஏங்குறது
பொட்டு வச்சி பூ முடிக்கும் நாள் இருக்கு

தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா

ஊர் தூங்கும் வேளையிலும் நான் தூங்கப் போனதில்லை
உன்னால தான் கண்ணே உன்னால தான்
யார் பேச்ச கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம் உன் பேரு தான்
மச்சான் உன் பேரு தான்
ஏ.. இத்தனை நினைப்பும் என் மேல இருந்தும் எட்டி போகலாமோ
சட்டப்படி ரெண்டும் கட்டிக்கும் முன்னே ஒட்டிக் கொள்ளலாமோ
முத்தமிட்டா மோசமென்ன உண்டாகும்
சத்தமிட்டா உன் நிலமை என்னாகும்… (சிரிப்பு)

தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரஞ் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும் மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடனும்
நான் காத்தாகி ஊத்தாகி மாமனைத் தழுவி கட்டிக்கணும்

தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
நானும் கூட பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா


பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்

ThaiManasu-Thoothu...





free web hit counter image


Tuesday, June 24, 2008

ஒரே முறை உன் தரிசனம்


தென்றல் நம்மைத் திடுக்கிட வைக்காது
தென்றல் நம்மை திசை மாற்றிச் செல்லாது

உற்ற தோழனாய் தோழியாய் கைக் கோர்த்து நடை பழகும்

இந்த பாடலும் தென்றல் போல உங்களுடன் நடந்து வரும்

பாடலின் காட்சியில் நடிகை சரண்யாவின் நடையே பிரதானப்படுத்தப் பட்டிருக்கும்

(மன்னிக்கவும்: பாடலின் வீடியோ இணையத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை)



இசை தேவதையின் குரல் தென்றலாய் இதோ


ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்

இளமை என்னும் பருவம் சிறிது காலமே
உறவில் காணும் சுகமும் விரைவில் மாறுமே
தென்றல் வந்துத் தென்றலை சேர்ந்தப் பின்பும் தென்றலே
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்

ஆத்ம ராகம் பாடுவோம் அளவில்லாத ஆனந்தம் மனதிலே

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்

தெய்வம் என்றும் தெய்வம் கோவில் மாறலாம்
தீபம் என்றும் தீபம் இடங்கள் மாறலாம்
கீதம் போகும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையே
உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா
உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா

வானம் பூமி ஆகலாம் மனது தானே காரணம் உலகிலே

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்


படம்: என் ஜீவன் பாடுது
இசை: இளையராஜா
ஆண்டு: 1988


Get this widget | Track details | eSnips Social DNA




free web hit counter image


Wednesday, April 23, 2008

இசை தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

இசை தேவதை எஸ்.ஜானகியின் பிறந்தநாளில் இந்தப் பாடலை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சிய்டைகிறேன்.


பம்பரம் சுற்றுவதைப் பார்த்திருப்பீர்கள். பம்பரம் போல ஒரு குரல் பாடுவதை கேட்டிருக்கிறீர்களா



இதோ இந்தப் பாடலைக் கேளுங்கள்


அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது

அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது

நந்தவனந் தான் என் நல்ல மனந்தான்

எந்த புறமும் என் அந்தப்புரம் தான்

சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட

இளமைக் கொடியில் இதழ்கள் விரியும்

அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது

அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது


புன்னகையில் புது கவிதைகள் எழுதிட பார்வைகள் மலர மலர
மெல்லிசையின் நயம் சலங்கையில் விளங்கிட பாதங்கள் அசைய அசைய
வந்த மகள் ஒரு பூங்கொடி வண்டு துளைத்திடும் மாங்கனி
சந்த மொழிகளின் காவியம் சிந்தை மயக்கிடும் ஓவியம்
கோடை வரும் நாள் வீசும் வாடை நான்
வாடை வரும் நாள் சூடும் போர்வை நான்
மல்லிகையை சூடி மந்திரங்கள் பாடி
பருவம் நடனம் பயிலும் நளினம்

அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது
நந்தவனந் தான் என் நல்ல மனந்தான்
எந்த புறமும் என் அந்தப்புரம் தான்
சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட
இளமைக் கொடியில் இதழ்கள் விரியும்
அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது


புள்ளி மயில் நடம் புரிந்திட புரிந்திட பாவங்கள் விளைய விளைய
கையளவு இடை நெளிந்திட நெளிந்திட பூவுடல் வளைய வளைய
கண்ணின் இமைகளில் ஆடிடும் எண்ணக் கனவுகள் ஆயிரம்
இந்த குலமகள் நூதனம் அந்த கலைமகள் சீதனம்
பாடல் இருந்தால் ராகம் சேராதோ
ஆடல் இருந்தால் தாளம் கூடாதோ
திங்கள் ஒரு பாதி தென்றல் ஒரு பாதி
விழியில் கலந்து வழியும் வடிவம்

அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது
நந்தவனந் தான் என் நல்ல மனந்தான்
எந்த புறமும் என் அந்தப்புரம் தான்
சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட
இளமைக் கொடியில் இதழ்கள் விரியும்
அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது
அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது




இசை: இளையராஜா

படம்: சாதனை

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்





free web hit counter image


Thursday, November 22, 2007

கண்ணன் மனம் என்னவோ




கண்ணன் பாடல்களிலே மிகப் பிரசித்தமானப் பாடல் இது.
பரதம் ஆடுவதற்கு ஏற்ற பாடல் என்பதால் இந்தப் பாடல் ஒலிக்காத மேடைகளே இல்லை எனலாம்

வசந்தராகம் படத்திற்காக M.S .விஸ்வநாதன் அவர்கள் இசையில் அம்மா பாடிய அற்புதமான பாடல் இது

கண்ணனை நினைத்து ஏங்கும் மீராவின் ஏக்கம் இந்த வரிகளை அம்மா பாடும் போது நம்மையும் ஏங்க வைக்கிறது


“மை கூட கரைகின்றதே இன்று பன்னீரும் சுடுகின்றதே”



கண்ணா… கண்ணா…. கண்ணா…
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே
அந்த மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்
மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே


கானத்தில் குழல் நாதத்தில் ஒரு கந்தர்வ லோகத்தில்
எனைக் கொண்டுச் சேர்ப்பான்
மோனத்தில் அந்தி நேரத்தில் அவன் முந்நூறு முத்தங்கள்
ஒன்றாகக் கேட்பான்
கார்கூந்தல் தனை நிவுவான் அதில்
கல்யாண சுகம் தேடுவான்
அந்தக் கணத்தில் என் உதட்டில் தன் உதட்டால்
முத்தெடுப்பான். வானம் எந்தன் காலில் வந்து கோலம் போடாதோ

கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே

மோகத்தில் விழி ஓரத்தில் கண்ணன் பார்த்தாலும் என்
நெஞ்சில் பசி ஆறிப் போகும்
காமத்தில் நடு ஜாமத்தில்
இமை மூடாத என் கண்ணில் நதி ஓடி பாயும்
மை கூட கரைகின்றதே இன்று பன்னீரும் சுடுகின்றதே
அந்தி இருட்டில் என் விழிக்குள் நின்றிருப்பான்
கண்மணிக்குள் இங்கும் அங்கும் எங்கும் காதல் கண்ணன் கோலங்கள்

கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே


படம் : வசந்தராகம்
இசை : M.S. விஸ்வநாதன்

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்






free web hit counter image


Friday, October 12, 2007

சின்னப்பூ சின்னப்பூ

இனிமை இனிமை இனிமை
இந்த குரலுக்கு வேறு என்ன சொல்லி விளக்கம் கொடுக்க முடியும்.


ஜப்பானின் அழகை படம் பிடிக்கும் இந்த பாடல் நம்மையும் அந்த ஊருக்கே கூட்டிச் செல்கிறது.


சொர்க்கத்தின் அந்தபுரம் போலிருக்கும் இந்த நகரின் அழகைக் கண்டு பரவசமடையும் ஒரு இளம்பெண் பாடும் பாடல் இது.

தன் மிகப்பெரிய கண்களால் பல பாவனைகள் காட்டக்கூடிய நடிகை ராதா திரையில் தோன்றும் பாடல் இதோ



சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா என்னைப் போல் கன்னிப்பூ
இளவேனில் காலம் இளமாலை நேரம்
இன்பத்தை அள்ளி இரைக்கும் சொர்க்கத்தின் அந்தப்புரம் இதுவோ

சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா என்னைப் போல் கன்னிப்பூ


பூவெல்லாம் மெளன பாஷைகள் பேச நான் என்ன சொல்ல ஓ..
நாளெல்லாம் அந்தி நேரத்தில் எந்தன் நெஞ்சத்தைக் கிள்ள ஓ..
ஏதோ ஏதேதோ எண்ணம் கூட
உள்ளம் என் உள்ளம் ஊஞ்சல் ஆட
கோடை நாட்களில் காமன் பண்டிகை
காற்றும் பூவும் தான் காதல் பாட்டுப் பாடும் வசந்த விழா

சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா என்னைப் போல் கன்னிப்பூ


மேகங்கள் புத்தன் கோவில்கள் தேடி ஊர்கோலம் செல்ல ஓ..
ராகங்கள் கட்சிக் கூட்டங்கள் பாடி வாழ்த்துக்கள் சொல்ல ஓ..
இன்பம் கொண்டாடும் மக்கள் இங்கே
மண்ணில் உண்டான சொர்க்கம் இங்கே
நூறு நாடுகள் வாழும் மாந்தர்கள்
கூடும் நாளிலே நேசம் பாசம் யாவும் விளைந்திடுமோ

சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா என்னைப் போல் கன்னிப்பூ


நூலாடைத் தொட்டுப் போராடும் காற்றே நீ கொஞ்சம் இங்கே நில்
நான் கூட வண்ண பூ மாலை நாள் எந்த நாளோ சொல்
சின்னப்பெண் தேடும் மன்னன் யாரோ
கன்னிப்பூ சூடும் கண்ணன் யாரோ
நீலத்தாமரை நீரைத்தேடுது
பூவைப்போலவே பூவை நானும் வாடும் பருவமிது

சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா என்னைப் போல் கன்னிப்பூ
இளவேனில் காலம் இளமாலை நேரம்
இன்பத்தை அள்ளி இரைக்கும் சொர்க்கத்தின் அந்தப்புரம் இதுவோ

சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா என்னைப் போல் கன்னிப்பூ



படம் : :ஜப்பானில் கல்யாணராமன்
வருடம்: :1985
வரிகள் : :வாலி

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்

ChinnaPooChinnaPoo...




free web hit counter image


Thursday, September 20, 2007

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

குயில் கூவும் வயல் வரப்புகள்,தெள்ளிய நீரோடை, ஆரவாரமில்லாத கிராமத்து மக்கள் இவை எல்லாம் எளிமையான தான்.
ஆனால் அந்த எளிமை தான் எத்தனை அழகு

ஆர்ப்பாட்டமெல்லாம் அடங்கிய பிறகு எளிமையைத் தான் மனம் நாடும்
ஆர்ப்பாட்டமான அழகெல்லாம் ஆயுள் வரை மனதில் நிலைப்பதில்லை.

இந்த பாடலும் எளிமையான அழகை தான் நம் கண் முன்னே கொண்டு வரும்.

தேவா என்ற இசையமைப்பாளரை இணைய வாசகர்கள் மறந்து வருகிறார்கள்
90 களில் அவர் பல அருமையான பாடல்களுக்கு மெட்டமைத்திருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஜானகியின் குரல் 100% மெட்டோடு பொருந்தி பாடலின் உயிராகின்றது

திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றும் வரிகள்


“துள்ளி விழும் அருவியைப் போல்
உன்னுடைய பார்வை என் மேல் பட்டவுடன் பறந்து வானில் சிறகடிப்பதென்ன”


கண்டிப்பாக தனிமையில் கேட்க வேண்டிய பாடல்

தலைவனை நினைத்து ஏங்கும் பெண் ஜானகி அவர்களின் குரலில் இதோ



தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

மாலையிட்டு பூ முடித்து மஞ்சளிட்டு நான் குளித்து
மன்னவனைத் தேடித் தேடி நான் மயங்குகிறேன்
தேரில் வரும் போதும் சுகம் தென்றல் தரும் நாதம் சுகம்
தெய்வத்திற்கு நன்றி சொல்லி நான் வணங்குகிறேன்
மஞ்சளோடு குங்குமமும் மன்னவனின் பூஜைக்கென்றுநான் படைத்தேன்
உயிரிலே உறவிலே கலந்து வாழ்கிறேன்
நான் நினைத்து பார்க்கிறேன் உன் நிழலில் சாய்கிறேன்

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

துள்ளி விழும் அருவியைப் போல்
உன்னுடைய பார்வை என் மேல் பட்டவுடன் பறந்து வானில் சிறகடிப்பதென்ன
என்னருகில் நீ இருந்து உன்னிரண்டு கண் மலர்ந்தால்
நெல்லின் மணி போல எந்தன் நிழல் தெரிவதென்ன
பெண்ணிலவு உன்னை எண்ணி வெண்ணிலவைப் போல இங்கு தேய்வதென்ன
தலைவனே தழுவ வா தனிமை வாட்டுது வா பருவம் ஏங்குது
முள்ளில் படுத்துத் தூங்குது

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

படம்: என் ஆசை மச்சான்
இசை: தேவா
வரிகள்: வாலி
வெளியான வருடம்: 1996

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்


Thalaivanai-EnAsai...




free web hit counter image


Wednesday, September 5, 2007

மாமர கிளியே உன்ன இன்னும் நா மறக்கலயே

மாமரம், கிளி, மாசு இல்லா மனம் கொண்ட மக்கள் இவை யாவும் கிராமத்திற்கே உரித்தானது
ஜானகியின் துள்ளல் நிறைந்த குரலில் ஒரு கிராமத்து பெண்ணின் காதல் வெளிப்படும் அழகை பாருங்கள்.


திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் இந்த பாடலின் இரண்டு வரிகள்

" அட டட மம்முதங்கணையே
வந்து வந்து மயக்குது எனையே "

மயக்கும் குரலில் இதோ பாடல்


அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே

அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே ஏ......ஏ

உன்ன நினைச்சே மஞ்சளரச்சேன்
மாசக் கணக்கா பூசிக் குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
உன்ன நினைச்சே மஞ்சளரச்சேன்
மாசக் கணக்கா பூசிக் குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
அட டட மாதுளங்கனியே இதை இன்னும் நீ நினைக்கலயே
கிட்ட வாயேன் கொத்தி போயேன்
உன்ன நா தடுக்கலயே மறுக்கலயே

அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே

உப்பக் கலந்தா கஞ்சி இனிக்கும்
உன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும்
அட பரிசந்தா போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு
உப்பக் கலந்தா கஞ்சி இனிக்கும்
உன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும்
அட பரிசந்தா போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு
அட டட தாமரை கொடியே இது
உன் தோள் தொடரலியே
செல்லக் கண்ணு சின்னப் பொண்ணு இத
நீ நினைக்கலயே அணைக்கலயே

அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே..

தந்தே நத்த தந்தே நா நா
தந்தீ நா தீநந்தாநா
நந்தா நா
தந்தீந தீநந்திந தாநா

மீன புடிக்க தூண்டிருக்கு
நீரைப் புடிக்க தொண்டியிருக்கு
அட உன்னத் தான் நா புடிக்க
கண் வலையப் போட்டேன்
அட டட மம்முதங்கணையே
வந்து வந்து மயக்குது எனையே
இந்த ஏக்கம் ஏது தூக்கம்
பாய போட்டு படுக்கலயே புடிக்கலயே


அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே ஏ...ஏ


படம்
: சிட்டுக் குருவி
இசை: இசைஞானி
பாடல்: வாலி
வெளியான ஆண்டு: 1978

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்

Chittukuruvi-ADADA...





free web hit counter image


Friday, August 17, 2007

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

அழகான மனிதர்களைக் கண்டாலோ, இயற்கையின் அதி உன்னத படைப்புகளைக் கண்டாலோ
நம் மனதில் தோன்றும் வரிகள் 'அழகு ஆயிரம் உலகம் முழுவதும்'

அழகு என்றால் என்ன என்று ஹாய் மதனிடம் ஒரு முறை கேட்கப்பட்டது
அதற்கு அவர் எதெல்லாம் ஒரு ஒழுங்கோடு வடிவமைக்கப் பட்டிருக்கிறதோ
அவை எல்லாம் நம் கண்களுக்கு அழகாகத் தோன்றுகின்றன என்றார்
இது ஓரளவு உண்மையான கூற்று தான்.

அழகு என்பது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப் படக் கூடியது.


கொட்டிக் கிடக்கின்றன ஆயிரம் அழகுகள் உலகங்கெங்கும் அவை எல்லாம்
ஒட்டிக் கொண்டிருக்கின்றது ஜானகியின் குரலோடு பாடலெங்கும்





பபப பாபப பபப பாபப
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமாமிய்யா மாமாமிய்யா
இறைவனின் திருக்கரம் எழுதிய ஓவியம்
மாமாமிய்யா மாமாமிய்யா மாமாமிய்யாமா
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்


பா....பபபபப்பா....பபபபப்பா
பபபாப்பா.......பபபாப்பா.....

ஏ...மனம் போல நாளும் மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்
ஏ...மனம் போல நாளும் மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்
சோலை எங்கும் காற்று
காற்றில் எங்கும் வாசம்
இளமையின் சிலிர்ப்புகள்
புதுமையின் அழைப்புகள் எங்கும்
மாமாமிய்யா மாமாமிய்யா

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமாமிய்யா மாமாமிய்யா
இறைவனின் திருக்கரம் எழுதிய ஓவியம்
மாமாமிய்யா மாமாமிய்யா மாமாமிய்யாமா

ஆ....மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்
ஏ......மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்
மாலை இன்ப மாலை
வேளை நல்ல வேளை
இனியது கனவுகள்
மயங்கிய நினைவுகள் எங்கும்
மாமாமிய்யா மாமாமிய்யா

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமாமிய்யா மாமாமிய்யா
இறைவனின் திருக்கரம் எழுதிய ஓவியம்
மாமாமிய்யா மாமாமிய்யா மாமாமிய்யாமா

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
லலலலாலலா..லலலலாலலா


படம்
: உல்லாசப் பறவைகள்
இசை: இசைஞானி
பாடல்: பஞ்சு அருணாசலம்
வெளியான ஆண்டு: 1980

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்

Azhagu Aayiram Ull...





free web hit counter image


Wednesday, July 25, 2007

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்

தாய்மை உணர்ச்சி மேலிட ஜானகி அவர்கள் லக்ஷிமிகாந்த் பியாரிலால் இசையில்
"உயிரே உனக்காக" படத்தில் பாடிய பாடலைத் தான் இந்த பதிவில் கேட்கப் போகிறீர்கள்

வானில் உள்ள விண்மீன் எல்லாம் கண்ணுங்குகிறதாம் இந்தக் குரலைக் கேட்டு

ஒவ்வொரு அட்சரத்திற்கும் பாவம் கொடுக்கக் கூடியவர் SJ. இந்தப் பாடலிலும்
ஒரு இடத்தில் 'அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்' என்று வரும். சாய்ந்திடுங்கள் என்று பாடும் போது
குரலும் அப்படியே சாய்வது போல் இருக்கும்.

இந்தப் பாடலை வெகுவாக ரசிக்க வேண்டும் என்றால் இரவில் உறங்குவதற்கு முன் கேளுங்கள்

உங்கள் தாயோ அல்லது உங்கள் இஷ்ட தெய்வமோ (பெண் தெய்வம்) இந்தப் பாடலைப் பாடுவது போல
கற்பனை செய்துக் கொண்டு பாட்டைக் கேளுங்கள். சொர்க்கம் நிச்சயம்


தேன் குரலில் தேனூறும் ராகம் திகட்டாமல் இருப்பது என்ன அதிசயமோ



ஆரீராரோ ஆரீராரீரோ
ஆரீராரோ ஆரீராரீரோ

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்....
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே........ஏ..ஏ...ஏ...

கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு

ஆடாத தீபம் தான் என் இல்லம்...ம்..ம்..ம்
பூங்காற்றுக்கும் தாங்காது என் உள்ளம்...ம்..ம்..ம்
உன் அன்பாலே பொங்காதோ ஆனந்த வெள்ளம்
கனவுகளே கனவுகளே இரவெனும் தீபம் எரிகின்ற நேரம்
உறவைத் தேடி வாருங்கள் கண்களில்....ல்...ல்..ல்
தென்றல் வீசும் கண்ணுறங்கு
உன்னை நீயே மறந்துறங்கு

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
ராரீரோ ஆரீராரீரோ
கண்ணின் மணியே நீயும் உறங்கு


ஆகாயம் மண் மீது வீழாது...
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது....
இனி என் போன்ற அன்னைக்கு ஏகாந்தம் ஏது
உறவுகளால் ஒரு உலகம்
இது ஒரு தோட்டம் கிளிகளின் கூட்டம்
ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம் கேட்கலாம்
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
ஆரீராரோ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் லால லால லா



படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த் பியாரிலால்
வெளியான வருடம்: 1985
வரிகள்: வைரமுத்து


பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்

UyiraeUnakkaaga-Th...




free web hit counter image

Friday, July 20, 2007

நிலவும் மலரும் -- SPB & S.Janaki இணைந்து பாடும் இசை நிகழ்ச்சி




சென்னையில் வருகிற 29 ஆம் தேதி எஸ்.பி.பி யும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடி கலக்கப் போகிறார்கள்
நீண்ட காலமாக இது போன்ற இசை விழாவிற்கு காத்திருந்த பலரில் நானும் ஒருவன்.
என் ஆதர்ஷ பாடகர்கள் இரண்டு பேரும் ஒரே மேடையில் பாடப் போகிறார்கள்

விவரம்

இடம்: நேரு உள் விளையாட்டு அரங்கம்
தேதி : 29 ஜூலை
நேரம் : மாலை 6 மணி
நுழைவு சீட்டு கிடைக்குமிடங்கள் : எல்லா நாயுடு ஹால் கடைகளிலும்

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9884152200

Wednesday, July 11, 2007

மானாட கொடி பூவாடும் ஒரு சோலை

எண்பதுகளில் வெளியான பெரும்பான்மையான திரைப்படங்களில் இயற்கையை ரசித்து கதாநாயகி பாடுவது போல் ஒரு பாடல்
கண்டிப்பாக இருக்கும். ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர இது போன்ற எல்லா பாடல்களையும் அம்மாவே பாடி இருப்பார்.
அந்த வரிசையில் அமைந்த பாடல்கள் எண்ணற்றவை. இந்த பதிவில் நடிகை ரம்யாகிருஷ்ணன் அறிமுகமான முதல் வசந்தம் என்ற
படத்தில் ஜானகி அவர்கள் பாடலை கேட்க போகிறீர்கள்.

இயற்கையை வியக்கும் இந்த பாடலில் "மேகத்தின் நாட்டியம் தந்தனன்னா தானனன்னா"
என்ற இடத்தில் வரிகள் அம்மாவின் குரலில் நாட்டியமாடும்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்




மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை
தோட்டத்து பூக்கள் எல்லாம் தேடுது என்னை
மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை


காற்சலங்கை ஓசையிட்டால் காட்டில் ஒரு பாட்டு வரும்
கைவளை தாளங்கள்
தந்தனன்னா தானனன்னா.. தந்தனன்னா தானனன்னா
ஓ....தேனோடும் வண்ணமலை நீரோடும் வெள்ளி அலை
ஜாடை மின்ன மின்ன ஆடை பின்ன பின்ன ஓ....

மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை

வானமென்னும் மேடையிலே வான வில்லின் ஓவியங்கள்
மேகத்தின் நாட்டியம்
தந்தனன்னா தானனன்னா.. தந்தனன்னா தானனன்னா
ஓ..ஊர்கோலம் வண்ணக்கிளி ஆலோலம் சொல்லும் மொழி
அன்னம் துள்ளத் துள்ள வண்ணம் என்ன சொல்லவோ

மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை
தோட்டத்து பூக்கள் எல்லாம் தேடுது என்னை
மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை



படம்: முதல் வசந்தம்
இசை: இசைஞானி
வெளியான வருடம்: 1986
ராகம்: சுத்த சாவேரி


பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்



Maanaa Kodi.mp3



free web hit counter image

Tuesday, July 3, 2007

நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்

இளையராஜா-மலையாள இயக்குனர்கள் இந்த கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும்
இதமான மெலடிகளாக அமையும். பரதன் இயக்கிய ஆவாரம்பூ படத்தில் எல்லா பாடல்களுமே அருமை

சோகத்தில் கொஞ்சம் சுகம் உண்டு

சோகமே இல்லையென்றாலும் கூட இந்த பாடலின் சுகம் உங்களை தாலாட்ட்ம்

காதலன் பிரிவால் வாடும் காதலியின் சோகம் அம்மாவின் குரலில்

தனிமையில் இந்த பாடலை கேட்டு பாருங்கள்.




நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்
நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்

நினைவோ வெறும் கனவோ இது எதுவோ
காதல் வரும் யார்க்கும் இந்த பாதை பொதுவோ

நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்

பல கோலம் போடும் வானம் மாறும் தடுமாறும்
புது ராகம் பாடும் காற்றோ சோகம் பாடும்
பனி தூங்கும் பூவின் தோற்றம் ஏனோ அதில் மாற்றம்
பகல் கூட இரவாய் தோன்றும் பாதை மாறும்
காதல் என்பது காலம் எங்கிலும் காத்து நின்றிடவோ
ஆசை என்பது ஆடிக் காற்றினில் ஓடி சென்றிடவோ
காதல் என்பது காலம் எங்கிலும் காத்து நின்றிடவோ
ஆசை என்பது ஆடிக் காற்றினில் ஓடி சென்றிடவோ
உறவே வெறும் கனவே வரும் நினைவே பழங்கதையே
கனவே என தெரிந்தும் மனம் நினைக்கும் அதையே

நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்

இளங்காதல் ஆசை நெஞ்சில் ஏக்கம் அது தாக்கும்
இரவென்ன பகலும் என்ன தூக்கம் போகும்
பிரிவேதும் அறியா நெஞ்சில் உருவானது பாரம்
உறவென்னும் உணர்வால் இங்கே உயிரே பாரம்
மோகம் என்பது வேகம் உள்ளது வேலி போட்டிடவோ
வேலி போட்டோரு காதல் தீயினை பாதுகாத்திடவோ
மோகம் என்பது வேகம் உள்ளது வேலி போட்டிடவோ
வேலி போட்டோரு காதல் தீயினை பாதுகாத்திடவோ
விதியால் ஒரு சதியால் இரு வழியாய் திசை பிரிந்தோம்
ஒரு நாள் அது திருநாள் ஒரு உணர்வால் இணைவோம்


நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்
நினைவோ வெறும் கனவோ இது எதுவோ
காதல் வரும் யார்க்கும் இந்த பாதை பொதுவோ

நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்


படம் : ஆவாரம்பூ
இசை: இளையராஜா
இயக்கம்: பரதன்
பாடியவர்: எஸ்.ஜானகி




Nathiyodum Karaioy...




free web hit counter image

Wednesday, June 27, 2007

அன்பு மலர்களின் சோலை இது




அன்பை வெளிப் படுத்தக் கூடிய ஒரு பாடல்

சத்தான வரிகளாக இல்லையென்றாலும் சந்தத்தோடு
பொருந்தக்கூடிய வரிகள்

இளையராஜாவின் அற்புதமான மெட்டில் அம்மா பாடிய பாடல்

இந்த பாடலோடு தொடர்புடைய ஒரு சம்பவம்

இரண்டாயிரமாவது ஆண்டில் வேலை தேடி பெங்களுரில் (அப்போது பெங்களுர் தான்)
சுற்றி கொண்டிருந்த போது Browsing centers தான் பொழுதுபோக்கு மையங்கள்.
கோரமங்கலா விலே ஒரு Browsing center ல் thenisai.com பற்றி அறிந்து அதில் சென்று
இளையராஜா FM ஐ க்ளிக்கினேன். காதில் தேனாய் பாய்ந்தது இந்த பாடல்

நம் மொழி அவ்வளவாக பேசப்படாத ஒரு ஊரில், விரக்தியான மனநிலையில்,
எதிர்பாராத வேளையில் அற்புதமான பாடலை கேட்கும் போது ஏற்படும் சுகம் அலாதியானது

நீங்களும் கொஞ்சம் கேட்டு பாருங்கள்


அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இதுவென்று
சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது

கண்ணில் தெரியுது அன்பின் எல்லை
காணும் கனவுக்கு எல்லை இல்லை
மண்ணில் நிலைக்கின்ற காலம் வரை
மங்கலம் பொங்கிட என்ன குறை
கண்மணியே.....சிறு பொன்விளக்கே
முழு நிலவாய் புது மலராய்
முழு நிலவாய் புது மலராய்
உன்னில் இருந்து இவ்வையத்தில் வாழ்வேன்

அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இதுவென்று
சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது

அந்தியின் சந்திப்பு நித்தம் நித்தம்
அன்பு வழங்கிடும் முத்தம் முத்தம்
இந்த பொழுது எனக்கினிமை
இருந்து மகிழ்வது உன் கடமை
வாழும் வரை வாழ்ந்திருப்பேன்
வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்
வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்
நெஞ்சம் நிறைவோடு வாழ்த்துகிறேன்

அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இதுவென்று
சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

படம்: கண்ணுக்கு மையெழுது
இசை: இளையராஜா
வெளியான ஆண்டு: 1986

AnbuMalar.mp3









free web hit counter image

Thursday, June 14, 2007

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
துச்சமாக எண்ணிநம்மை தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
நச்சைவாயிலே கொணர்ந்து நண்பமூட்டு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

மகாகவி பாரதியார்

தாலாட்டும் பூங்காற்று

இது ஐம்பது வருடங்களாக தமிழ் மக்களை தாலாட்டிக் கொண்டிருக்கும் தென்றலை பற்றிய பதிவு. டி.ஆர் மகாலிங்கம் முதல் சங்கர் மகாதேவன் வரை இந்த குரல் இணை சேராத ஆண் குரலே இல்லை. ஆர்.பார்த்தசாரதி முதல் யுவன் சங்கர் ராஜா வரை இந்த குரலுக்கு மெட்டமைக்காத இசையமைப்பாளர்களும் இல்லை. இசையில் பல பரிமாணங்களை கொண்டது தமிழ் திரை. அத்தனை பரிமாணங்களிலும் முத்திரை பதித்தக் குரல். தாய்மை, பக்தி, கருணை, இரக்கம், கோபம், காதல்,விரசம், சோகம் என்று எல்லா பாவங்களையும் பாடலில் கொண்டுவரும் அசாத்திய திறமை கொண்ட குரல். தென்றலாய் உள்ளம் வருடும் அந்த குரல் எஸ்.ஜானகியுடையது என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள். வரும் நாட்களில் அவர் பாடிய பல பாடல்களை தாங்கி வரும் இந்த தொடர்.



முதல் பாடலாக இளையாராஜாவின் இசையில் கோபுர வாசலிலே படத்தில் அவர்
பாடிய பாடல்.

தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ… மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ.. நெஞ்சமே ஓ.. நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ.. மன்னவா


நள்ளிரவில் நான் கண் விழிக்க
உன் நினைவில் என் மெய் சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ.. மன்னவா


எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா என்னாளும்
ஆசையில் நாள்தோரும் நான் தொழும்
ஆலயம் நீ அல்லவா


தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ.. மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ.. நெஞ்சமே ஓ.. நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ.. மன்னவா

படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
குரல்: எஸ்.ஜானகி

















Thaalaattum.mp3











free web hit counter image
http://www.hit-counter-download.com/