Thursday, November 22, 2007

கண்ணன் மனம் என்னவோ




கண்ணன் பாடல்களிலே மிகப் பிரசித்தமானப் பாடல் இது.
பரதம் ஆடுவதற்கு ஏற்ற பாடல் என்பதால் இந்தப் பாடல் ஒலிக்காத மேடைகளே இல்லை எனலாம்

வசந்தராகம் படத்திற்காக M.S .விஸ்வநாதன் அவர்கள் இசையில் அம்மா பாடிய அற்புதமான பாடல் இது

கண்ணனை நினைத்து ஏங்கும் மீராவின் ஏக்கம் இந்த வரிகளை அம்மா பாடும் போது நம்மையும் ஏங்க வைக்கிறது


“மை கூட கரைகின்றதே இன்று பன்னீரும் சுடுகின்றதே”



கண்ணா… கண்ணா…. கண்ணா…
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே
அந்த மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்
மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே


கானத்தில் குழல் நாதத்தில் ஒரு கந்தர்வ லோகத்தில்
எனைக் கொண்டுச் சேர்ப்பான்
மோனத்தில் அந்தி நேரத்தில் அவன் முந்நூறு முத்தங்கள்
ஒன்றாகக் கேட்பான்
கார்கூந்தல் தனை நிவுவான் அதில்
கல்யாண சுகம் தேடுவான்
அந்தக் கணத்தில் என் உதட்டில் தன் உதட்டால்
முத்தெடுப்பான். வானம் எந்தன் காலில் வந்து கோலம் போடாதோ

கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே

மோகத்தில் விழி ஓரத்தில் கண்ணன் பார்த்தாலும் என்
நெஞ்சில் பசி ஆறிப் போகும்
காமத்தில் நடு ஜாமத்தில்
இமை மூடாத என் கண்ணில் நதி ஓடி பாயும்
மை கூட கரைகின்றதே இன்று பன்னீரும் சுடுகின்றதே
அந்தி இருட்டில் என் விழிக்குள் நின்றிருப்பான்
கண்மணிக்குள் இங்கும் அங்கும் எங்கும் காதல் கண்ணன் கோலங்கள்

கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே


படம் : வசந்தராகம்
இசை : M.S. விஸ்வநாதன்

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்






free web hit counter image