Wednesday, April 23, 2008

இசை தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

இசை தேவதை எஸ்.ஜானகியின் பிறந்தநாளில் இந்தப் பாடலை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சிய்டைகிறேன்.


பம்பரம் சுற்றுவதைப் பார்த்திருப்பீர்கள். பம்பரம் போல ஒரு குரல் பாடுவதை கேட்டிருக்கிறீர்களா



இதோ இந்தப் பாடலைக் கேளுங்கள்


அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது

அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது

நந்தவனந் தான் என் நல்ல மனந்தான்

எந்த புறமும் என் அந்தப்புரம் தான்

சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட

இளமைக் கொடியில் இதழ்கள் விரியும்

அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது

அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது


புன்னகையில் புது கவிதைகள் எழுதிட பார்வைகள் மலர மலர
மெல்லிசையின் நயம் சலங்கையில் விளங்கிட பாதங்கள் அசைய அசைய
வந்த மகள் ஒரு பூங்கொடி வண்டு துளைத்திடும் மாங்கனி
சந்த மொழிகளின் காவியம் சிந்தை மயக்கிடும் ஓவியம்
கோடை வரும் நாள் வீசும் வாடை நான்
வாடை வரும் நாள் சூடும் போர்வை நான்
மல்லிகையை சூடி மந்திரங்கள் பாடி
பருவம் நடனம் பயிலும் நளினம்

அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது
நந்தவனந் தான் என் நல்ல மனந்தான்
எந்த புறமும் என் அந்தப்புரம் தான்
சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட
இளமைக் கொடியில் இதழ்கள் விரியும்
அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது


புள்ளி மயில் நடம் புரிந்திட புரிந்திட பாவங்கள் விளைய விளைய
கையளவு இடை நெளிந்திட நெளிந்திட பூவுடல் வளைய வளைய
கண்ணின் இமைகளில் ஆடிடும் எண்ணக் கனவுகள் ஆயிரம்
இந்த குலமகள் நூதனம் அந்த கலைமகள் சீதனம்
பாடல் இருந்தால் ராகம் சேராதோ
ஆடல் இருந்தால் தாளம் கூடாதோ
திங்கள் ஒரு பாதி தென்றல் ஒரு பாதி
விழியில் கலந்து வழியும் வடிவம்

அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது
நந்தவனந் தான் என் நல்ல மனந்தான்
எந்த புறமும் என் அந்தப்புரம் தான்
சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட
இளமைக் கொடியில் இதழ்கள் விரியும்
அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது
அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது




இசை: இளையராஜா

படம்: சாதனை

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்





free web hit counter image