தென்றல் நம்மைத் திடுக்கிட வைக்காது
தென்றல் நம்மை திசை மாற்றிச் செல்லாது
உற்ற தோழனாய் தோழியாய் கைக் கோர்த்து நடை பழகும்
இந்த பாடலும் தென்றல் போல உங்களுடன் நடந்து வரும்
பாடலின் காட்சியில் நடிகை சரண்யாவின் நடையே பிரதானப்படுத்தப் பட்டிருக்கும்
(மன்னிக்கவும்: பாடலின் வீடியோ இணையத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை)
இசை தேவதையின் குரல் தென்றலாய் இதோ
ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா
ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
இளமை என்னும் பருவம் சிறிது காலமே
உறவில் காணும் சுகமும் விரைவில் மாறுமே
தென்றல் வந்துத் தென்றலை சேர்ந்தப் பின்பும் தென்றலே
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்
ஆத்ம ராகம் பாடுவோம் அளவில்லாத ஆனந்தம் மனதிலே
ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா
ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
தெய்வம் என்றும் தெய்வம் கோவில் மாறலாம்
தீபம் என்றும் தீபம் இடங்கள் மாறலாம்
கீதம் போகும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையே
உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா
உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா
வானம் பூமி ஆகலாம் மனது தானே காரணம் உலகிலே
ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா
ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
படம்: என் ஜீவன் பாடுது
இசை: இளையராஜா
ஆண்டு: 1988
|
1 comment:
off course... very nice song.chance less bhavam in amma's voice
Post a Comment