Thursday, June 14, 2007

தாலாட்டும் பூங்காற்று

இது ஐம்பது வருடங்களாக தமிழ் மக்களை தாலாட்டிக் கொண்டிருக்கும் தென்றலை பற்றிய பதிவு. டி.ஆர் மகாலிங்கம் முதல் சங்கர் மகாதேவன் வரை இந்த குரல் இணை சேராத ஆண் குரலே இல்லை. ஆர்.பார்த்தசாரதி முதல் யுவன் சங்கர் ராஜா வரை இந்த குரலுக்கு மெட்டமைக்காத இசையமைப்பாளர்களும் இல்லை. இசையில் பல பரிமாணங்களை கொண்டது தமிழ் திரை. அத்தனை பரிமாணங்களிலும் முத்திரை பதித்தக் குரல். தாய்மை, பக்தி, கருணை, இரக்கம், கோபம், காதல்,விரசம், சோகம் என்று எல்லா பாவங்களையும் பாடலில் கொண்டுவரும் அசாத்திய திறமை கொண்ட குரல். தென்றலாய் உள்ளம் வருடும் அந்த குரல் எஸ்.ஜானகியுடையது என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள். வரும் நாட்களில் அவர் பாடிய பல பாடல்களை தாங்கி வரும் இந்த தொடர்.



முதல் பாடலாக இளையாராஜாவின் இசையில் கோபுர வாசலிலே படத்தில் அவர்
பாடிய பாடல்.

தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ… மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ.. நெஞ்சமே ஓ.. நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ.. மன்னவா


நள்ளிரவில் நான் கண் விழிக்க
உன் நினைவில் என் மெய் சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ.. மன்னவா


எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா என்னாளும்
ஆசையில் நாள்தோரும் நான் தொழும்
ஆலயம் நீ அல்லவா


தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ.. மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ.. நெஞ்சமே ஓ.. நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ.. மன்னவா

படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
குரல்: எஸ்.ஜானகி

















Thaalaattum.mp3











free web hit counter image
http://www.hit-counter-download.com/

8 comments:

Dr. Proline said...

Yeah,u r right,Sree! kaadhalayum, Viraha dhabathayum... Kuralil kondu vara ivaaral mattume mudiyum!!! SHE IS SIMPLY GREAT! DOWNED TO EARTH!!
Dont know how to praise Our " Saraswathi" Smt. S.Janaki!!! Kuralum Inimai..Gunamum Inimai...Gokila vaniye!!!Unai pol yaarundu..!I LOVE U,MOM!

Anonymous said...

Well Done Mr.Sricharan.

Great Pickup. I wish all the best to your gr8 effort about Janakiamma. if u like Pls send to me invitaion may i post in your post combined with our baluji songs?

ஸ்ரீ சரவணகுமார் said...

கோவை ரவீ

how to send invitation

எங்கிருந்து அனுப்ப வேண்டும்

Anonymous said...

Heyy Sree

That's a cool thought about the isaiKuyil. She is amazing. She is like milestone among tamil singers.
Happy to see you post about her.
All the best.
-Bala

லக்ஷ்மி said...

நல்ல முயற்சி ஸ்ரீசரண். ஜானகி அவர்களின் தேனிசைக்குரலை மையப்படுத்திய தொடருக்கு பொருத்தமான தலைப்பும் கூட. தொடர வாழ்த்துக்கள்.

CVR said...

மிக நல்ல முயற்சி!!
என் மனதை மயக்கிய பாடகிகளில் முன்னனியில் இருப்பவர் ஜானகி!!
அவரின் பேரில் பதிவு அமைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்!! :-)

G.Ragavan said...

நல்ல முயற்சி ஸ்ரீசரண். தமிழ்ப் பாடகிகளில் எஸ்.ஜானகி அவர்களுக்குச் சிறப்பான ஒரு இடம் யாராலும் மறுக்கவே முடியாதது. இந்த வலைப்பூ வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

இந்தப் பாடல் எனக்கும் பிடித்த அருமையான பாடல்.

Manjai Democrat said...

She deserves all the accolades that she gets! What a voice! what a persona! What incredible talent! My best wishes to you on this blog.