Wednesday, July 11, 2007

மானாட கொடி பூவாடும் ஒரு சோலை

எண்பதுகளில் வெளியான பெரும்பான்மையான திரைப்படங்களில் இயற்கையை ரசித்து கதாநாயகி பாடுவது போல் ஒரு பாடல்
கண்டிப்பாக இருக்கும். ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர இது போன்ற எல்லா பாடல்களையும் அம்மாவே பாடி இருப்பார்.
அந்த வரிசையில் அமைந்த பாடல்கள் எண்ணற்றவை. இந்த பதிவில் நடிகை ரம்யாகிருஷ்ணன் அறிமுகமான முதல் வசந்தம் என்ற
படத்தில் ஜானகி அவர்கள் பாடலை கேட்க போகிறீர்கள்.

இயற்கையை வியக்கும் இந்த பாடலில் "மேகத்தின் நாட்டியம் தந்தனன்னா தானனன்னா"
என்ற இடத்தில் வரிகள் அம்மாவின் குரலில் நாட்டியமாடும்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்




மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை
தோட்டத்து பூக்கள் எல்லாம் தேடுது என்னை
மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை


காற்சலங்கை ஓசையிட்டால் காட்டில் ஒரு பாட்டு வரும்
கைவளை தாளங்கள்
தந்தனன்னா தானனன்னா.. தந்தனன்னா தானனன்னா
ஓ....தேனோடும் வண்ணமலை நீரோடும் வெள்ளி அலை
ஜாடை மின்ன மின்ன ஆடை பின்ன பின்ன ஓ....

மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை

வானமென்னும் மேடையிலே வான வில்லின் ஓவியங்கள்
மேகத்தின் நாட்டியம்
தந்தனன்னா தானனன்னா.. தந்தனன்னா தானனன்னா
ஓ..ஊர்கோலம் வண்ணக்கிளி ஆலோலம் சொல்லும் மொழி
அன்னம் துள்ளத் துள்ள வண்ணம் என்ன சொல்லவோ

மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை
தோட்டத்து பூக்கள் எல்லாம் தேடுது என்னை
மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை



படம்: முதல் வசந்தம்
இசை: இசைஞானி
வெளியான வருடம்: 1986
ராகம்: சுத்த சாவேரி


பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்



Maanaa Kodi.mp3



free web hit counter image

4 comments:

Anonymous said...

thanks for this rare song

Anonymous said...

மிகவும் நல்ல பாடல். என் மனம் கவர்ந்த பாடலில் ஒன்றும் கூட.

கோவை வானொலியில் பள்ளி நாட்களில் அடிக்கடி ஒலிபரப்புவார்கள். என்னை அறியாமலேயே பள்ளி நாள் ஞாபகங்கள் வருகின்றன.

sivaramang.wordpress.com

Anonymous said...

Thanks for the Melody song.

Starting il varum humming ai sollama vittuteengalae.........

Ellavatraiyum rasithu padum oru Great Singer.....

With Love,
Usha Sankar.

ஸ்ரீ சரவணகுமார் said...

விஜய், சிவா மற்றும் உஷா,
தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி