Tuesday, July 3, 2007

நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்

இளையராஜா-மலையாள இயக்குனர்கள் இந்த கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும்
இதமான மெலடிகளாக அமையும். பரதன் இயக்கிய ஆவாரம்பூ படத்தில் எல்லா பாடல்களுமே அருமை

சோகத்தில் கொஞ்சம் சுகம் உண்டு

சோகமே இல்லையென்றாலும் கூட இந்த பாடலின் சுகம் உங்களை தாலாட்ட்ம்

காதலன் பிரிவால் வாடும் காதலியின் சோகம் அம்மாவின் குரலில்

தனிமையில் இந்த பாடலை கேட்டு பாருங்கள்.




நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்
நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்

நினைவோ வெறும் கனவோ இது எதுவோ
காதல் வரும் யார்க்கும் இந்த பாதை பொதுவோ

நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்

பல கோலம் போடும் வானம் மாறும் தடுமாறும்
புது ராகம் பாடும் காற்றோ சோகம் பாடும்
பனி தூங்கும் பூவின் தோற்றம் ஏனோ அதில் மாற்றம்
பகல் கூட இரவாய் தோன்றும் பாதை மாறும்
காதல் என்பது காலம் எங்கிலும் காத்து நின்றிடவோ
ஆசை என்பது ஆடிக் காற்றினில் ஓடி சென்றிடவோ
காதல் என்பது காலம் எங்கிலும் காத்து நின்றிடவோ
ஆசை என்பது ஆடிக் காற்றினில் ஓடி சென்றிடவோ
உறவே வெறும் கனவே வரும் நினைவே பழங்கதையே
கனவே என தெரிந்தும் மனம் நினைக்கும் அதையே

நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்

இளங்காதல் ஆசை நெஞ்சில் ஏக்கம் அது தாக்கும்
இரவென்ன பகலும் என்ன தூக்கம் போகும்
பிரிவேதும் அறியா நெஞ்சில் உருவானது பாரம்
உறவென்னும் உணர்வால் இங்கே உயிரே பாரம்
மோகம் என்பது வேகம் உள்ளது வேலி போட்டிடவோ
வேலி போட்டோரு காதல் தீயினை பாதுகாத்திடவோ
மோகம் என்பது வேகம் உள்ளது வேலி போட்டிடவோ
வேலி போட்டோரு காதல் தீயினை பாதுகாத்திடவோ
விதியால் ஒரு சதியால் இரு வழியாய் திசை பிரிந்தோம்
ஒரு நாள் அது திருநாள் ஒரு உணர்வால் இணைவோம்


நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்
நினைவோ வெறும் கனவோ இது எதுவோ
காதல் வரும் யார்க்கும் இந்த பாதை பொதுவோ

நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்


படம் : ஆவாரம்பூ
இசை: இளையராஜா
இயக்கம்: பரதன்
பாடியவர்: எஸ்.ஜானகி




Nathiyodum Karaioy...




free web hit counter image

5 comments:

Anonymous said...

Dear SriSharan,
Thanks for the Beautiful song.MY alltime favourite song of SJ.Naan PC vangiya udan, net il thedi ketta mudhal padal idhu dhan....

Your Collections are very Nice.Audio Quality is Very Best.

Once again thanks for the Gem.

with Love,
Usha Sankar.

கானா பிரபா said...

இப்படி எத்தனையோ நல்ல பாடல்கள் இருந்தாலும் பரந்தளவிலான ரசிகர் வட்டத்தைச் செல்லாமல் மறைந்துவிட்டன. அருமையான பாடல் வளைந்தோடும் நதி போல..

ஸ்ரீ சரவணகுமார் said...

உஷா, கானாபிரபா

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

paramesh said...

உங்கள் அற்புதமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Abhilash Pudukad said...

Good collection of S.Janakiyamma