Thursday, September 20, 2007

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

குயில் கூவும் வயல் வரப்புகள்,தெள்ளிய நீரோடை, ஆரவாரமில்லாத கிராமத்து மக்கள் இவை எல்லாம் எளிமையான தான்.
ஆனால் அந்த எளிமை தான் எத்தனை அழகு

ஆர்ப்பாட்டமெல்லாம் அடங்கிய பிறகு எளிமையைத் தான் மனம் நாடும்
ஆர்ப்பாட்டமான அழகெல்லாம் ஆயுள் வரை மனதில் நிலைப்பதில்லை.

இந்த பாடலும் எளிமையான அழகை தான் நம் கண் முன்னே கொண்டு வரும்.

தேவா என்ற இசையமைப்பாளரை இணைய வாசகர்கள் மறந்து வருகிறார்கள்
90 களில் அவர் பல அருமையான பாடல்களுக்கு மெட்டமைத்திருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஜானகியின் குரல் 100% மெட்டோடு பொருந்தி பாடலின் உயிராகின்றது

திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றும் வரிகள்


“துள்ளி விழும் அருவியைப் போல்
உன்னுடைய பார்வை என் மேல் பட்டவுடன் பறந்து வானில் சிறகடிப்பதென்ன”


கண்டிப்பாக தனிமையில் கேட்க வேண்டிய பாடல்

தலைவனை நினைத்து ஏங்கும் பெண் ஜானகி அவர்களின் குரலில் இதோ



தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

மாலையிட்டு பூ முடித்து மஞ்சளிட்டு நான் குளித்து
மன்னவனைத் தேடித் தேடி நான் மயங்குகிறேன்
தேரில் வரும் போதும் சுகம் தென்றல் தரும் நாதம் சுகம்
தெய்வத்திற்கு நன்றி சொல்லி நான் வணங்குகிறேன்
மஞ்சளோடு குங்குமமும் மன்னவனின் பூஜைக்கென்றுநான் படைத்தேன்
உயிரிலே உறவிலே கலந்து வாழ்கிறேன்
நான் நினைத்து பார்க்கிறேன் உன் நிழலில் சாய்கிறேன்

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

துள்ளி விழும் அருவியைப் போல்
உன்னுடைய பார்வை என் மேல் பட்டவுடன் பறந்து வானில் சிறகடிப்பதென்ன
என்னருகில் நீ இருந்து உன்னிரண்டு கண் மலர்ந்தால்
நெல்லின் மணி போல எந்தன் நிழல் தெரிவதென்ன
பெண்ணிலவு உன்னை எண்ணி வெண்ணிலவைப் போல இங்கு தேய்வதென்ன
தலைவனே தழுவ வா தனிமை வாட்டுது வா பருவம் ஏங்குது
முள்ளில் படுத்துத் தூங்குது

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

படம்: என் ஆசை மச்சான்
இசை: தேவா
வரிகள்: வாலி
வெளியான வருடம்: 1996

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்


Thalaivanai-EnAsai...




free web hit counter image


4 comments:

கானா பிரபா said...

அருமையான பாட்டு, மிக்க நன்றி

ஸ்ரீ சரவணகுமார் said...

கானா பிரபா தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

Anonymous said...

Sri Charan sir,

Small request pls update and change ur postings names in single line because i can search easily missing songs in my isaikuyil blogspot. I hope u will do it. Thx in advance.

நிலாக்காலம் said...

மிக அருமையான பாடல். ஏற்கனவே வெளியான 'பரிகாரம்' என்ற படத்தில் பி.சுசீலா அவர்கள் பாடியிருந்தார்.

அதனை இங்கே பார்க்கலாம்:
http://in.youtube.com/watch?v=rA6APpxIVfo

'என் ஆசை மச்சான்' படத்திற்காக எஸ்.ஜானகி அவர்கள் குரலில் பதிந்திருக்கிறார்கள்.