Wednesday, June 27, 2007

அன்பு மலர்களின் சோலை இது




அன்பை வெளிப் படுத்தக் கூடிய ஒரு பாடல்

சத்தான வரிகளாக இல்லையென்றாலும் சந்தத்தோடு
பொருந்தக்கூடிய வரிகள்

இளையராஜாவின் அற்புதமான மெட்டில் அம்மா பாடிய பாடல்

இந்த பாடலோடு தொடர்புடைய ஒரு சம்பவம்

இரண்டாயிரமாவது ஆண்டில் வேலை தேடி பெங்களுரில் (அப்போது பெங்களுர் தான்)
சுற்றி கொண்டிருந்த போது Browsing centers தான் பொழுதுபோக்கு மையங்கள்.
கோரமங்கலா விலே ஒரு Browsing center ல் thenisai.com பற்றி அறிந்து அதில் சென்று
இளையராஜா FM ஐ க்ளிக்கினேன். காதில் தேனாய் பாய்ந்தது இந்த பாடல்

நம் மொழி அவ்வளவாக பேசப்படாத ஒரு ஊரில், விரக்தியான மனநிலையில்,
எதிர்பாராத வேளையில் அற்புதமான பாடலை கேட்கும் போது ஏற்படும் சுகம் அலாதியானது

நீங்களும் கொஞ்சம் கேட்டு பாருங்கள்


அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இதுவென்று
சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது

கண்ணில் தெரியுது அன்பின் எல்லை
காணும் கனவுக்கு எல்லை இல்லை
மண்ணில் நிலைக்கின்ற காலம் வரை
மங்கலம் பொங்கிட என்ன குறை
கண்மணியே.....சிறு பொன்விளக்கே
முழு நிலவாய் புது மலராய்
முழு நிலவாய் புது மலராய்
உன்னில் இருந்து இவ்வையத்தில் வாழ்வேன்

அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இதுவென்று
சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது

அந்தியின் சந்திப்பு நித்தம் நித்தம்
அன்பு வழங்கிடும் முத்தம் முத்தம்
இந்த பொழுது எனக்கினிமை
இருந்து மகிழ்வது உன் கடமை
வாழும் வரை வாழ்ந்திருப்பேன்
வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்
வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்
நெஞ்சம் நிறைவோடு வாழ்த்துகிறேன்

அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இதுவென்று
சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

படம்: கண்ணுக்கு மையெழுது
இசை: இளையராஜா
வெளியான ஆண்டு: 1986

AnbuMalar.mp3









free web hit counter image

5 comments:

ஸ்ரீ சரவணகுமார் said...

test

Anonymous said...

WOW thatz great piece of work from all u guys.. his music .. her vocal.. ur lyrics.. awesome work buddy.. :) throw more songs.. i am going to be one good regular visitor to this blog.. btw all the best for the blog..

Anonymous said...

nice song

Anonymous said...

Dear Sricharan,
Thanks for the BEAUTIFUL song. Naan oru IR fan.IR in isaiyil Sj in padal ellam rombavae pidikum.

Enakum sila ninaivul undu indha padalai ketkum podhu...Neenda naatkalaga thedi kondu irundhen.THanks For the Great Song...

Lyric is so nice ....


இந்த பொழுது எனக்கினிமை
இருந்து மகிழ்வது உன் கடமை
வாழும் வரை வாழ்ந்திருப்பேன்
வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்
வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்
நெஞ்சம் நிறைவோடு வாழ்த்துகிறேன்

SJ in voice il ketkum podhu inimai adhigam.....

With Love,
Usha Sankar.

ஸ்ரீ சரவணகுமார் said...

DJO & USHA

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி